Monday, February 7, 2011

ஆறு மனமே ஆறு

ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு 
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு (ஆறு)

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் 
உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் 
துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி !

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் - 
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும் - 
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும் (ஆறு)

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் 
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை 
உயரும்போது பணிவு கொண்டால் 
உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை எனப்து அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த 
நான்கு கட்டளை அறிந்த மனதில் 
எல்லா நன்மையும் உண்டாகும் (ஆறு)

ஆசை,கோபம்,களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம் 
அன்பு,நன்றி,கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம் - இதில் 
மிருகம் என்பது கள்ள மனம் - உயர்
தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது 
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் (ஆறு) 


No comments:

Post a Comment