Wednesday, June 15, 2011

ஈழத்தமிழின இனப்படுகொலை ஒளியேந்தல் வலையகம்: CANDLE LIGHT VIGIL FOR TAMILS

ஈழத்தமிழின இனப்படுகொலை ஒளியேந்தல் வலையகம்: CANDLE LIGHT VIGIL FOR TAMILS

ர்தாளி அறுத்த கதை
உறவு மானம் பறித்த கதை
என் தமிழர் ரத்தம் குடித்த கதை
இவ்வுலக மறியும் தெரிஞ்சிக்கோ; உன் முடிவை நீயும் புரிஞ்சிக்கோ;

ஈழ-மது மலரும் மலரும்
என் பாட்டன் மண்ணில் உறவுவாழும்
காலம் போட்ட முடிச்சமாத்தி போட்ட முண்டம் நீயடா
உனக்கான பதிலை யினி ஊரு மொத்தம் சொல்லுண்டா;

ஊருவிட்டு; வந்தவன் நீ
வீடு புகுந்து; தின்னவன் நீ
சோறு தின்ன மிச்சதுக்கு மண்ணை சேர்த்துத் கொண்டதெல்லாம்
ஊருக் கண்ணில் குத்துதே; உன் தலையெழுத்தா மாறுதே;

முள்ளிவாய்க்கால் முடிவுடா
உன் கொட்டம் அடங்கும் கணக்குடா
நீ தொட்ட பெண்கள் அத்தனையும் விட்ட சாபம்; சாப(ன்)டா
அவள் ரத்தம் சுத்தம் பாருடான்னு; பறக்கும் வெற்றிக் கொடி காட்டு(ன்)டா;

கர்ப்பிணிய கிழிச்சியே
குழந்தை காலை தலையை உடைச்சியே
வயசான கிழத்தைக் கூட வீழும்வரை அடிச்சியே
என் மானத்தி மானம் பரப்பி தமிழர் புகழை கெடுத்தியே;

ஒவ்வொன்னா வீழுது
உன் கிரிடம் சாயப் போகுது
கொள்ளும் களியும் தின்னும் போது
எங்க அலறல் சப்தம் புரியு(ன்)டா;

நீதி யொன்று உண்டுடா
உண்மை யென்றும் வெல்லு(ன்)டா
விட்ட சொட்டு ரத்தம் கூட -
எம் விடுதலையா முளைக்கு(ன்)டா;

எம் மடியில் கைய வச்சவன்
காம ரத்தம் குடித்தவன்
எல்லோரும் வாங்கடா, கதற கதற உருப்பறுத்த
கையாலயே இனி சாவுடா;

கத்தி கத்தி அழுதோமே
ஈ மொய்க்க கிடந்தோமே
முள்ளுக் கம்பி பின்னாலே எம்
வரலாறை புதைச்சோமே;

தொட்ட இடம் குத்துச்சே
தட்டு தூக்கி நின்னுச்சே
ராஜபாட்டை ஆண்ட மக்கள் தெருத்தெருவா அலஞ்சிச்சே
வீழ்ந்த நெருப்பில் கருகி கருகி மொத்த இனமும் அழிஞ்சிச்சே
அத்தனைக்கும் பதிலுடா; எம் மக்கள் ஈழம் வெல்லு(ன்)டா!!

Tuesday, March 1, 2011

ஸ்ரீ ராகவேந்திரரின் கடைசி உரை மற்றும் பிருந்தாவன பிரவேசம்



                                                          
1671 ஆம் ஆண்டு ராகவேதிர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்க்கு முன் தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கும் ஒரு உரையை தந்தார். ஆவ்வுரையிலிருந்து சில பகுதிகள்:
  • சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.

  • நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்

  • சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினானும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.

  • கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது'. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு எற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெரும் முட்டாள்த்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றும் இன்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.
இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.

[

சீரடி சாயிபாபாவின் பதினோரு வாக்குறுதிகள்.......

                                                        
(1) எவனொருவன் சீரடிக்கு வந்து கால் பதிக்கின்றனோ அவனுடைய துயரங்கள் அனைத்தும் அந்த கணமே விலகிவிடும்


(2) துர்பாக்யசாலிகளும் , துயரத்தில் மூழ்கியவர்களும் இங்கு வந்து மசூதியின் படிகளில் ஏறியவுடனேயே அவர்களுடைய மனம் குதுகூலம் அடையும் , இதயத்தில் இன்பம் உண்டாகும்.


(3) நான் எந்த பூத உடலை துறந்து விட்டாலும் கூட என்றும் போலவே அதே வேகத்துடன்தான் என் பணியை செய்து கொண்டு இருப்பேன் .

(4) என் கல்லறை கூட என் பக்தர்களுடன் பேசிக்கொண்டும் அவர்களுக்கு ஆறுதல் தந்து கொண்டும் இருக்கும் 



(5) நான் சவக்குழியில் புதைந்து இருந்தாலும் என் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்

(6) என்னுடைய இறந்து போன உடல் கூட சவக்குழியில் இருந்து என் பக்தர்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கும்



(7) என்னிடம் வந்து தஞ்சம் அடைந்தவர்களையும் , என்னையே முழுமையாக நம்பி என்னிடம் வந்து விட்டவர்கலுக்கும் நான் உதவிக் கொண்டும் , வழி காட்டிக் கொண்டும் இருப்பேன்


(8) நீ என்னைப் பார்த்தால் , நானும் உன்னைப் பார்ப்பேன்

(9) உன் பாரத்தை என் மீது இறக்கி வை , அதை நான் சுமப்பேன்



(10) நீ என்னிடம் வந்து ஆலோசனை அல்லது உதவி கேட்டால் அதை உடனடியாகத் தர நான் தயங்கவே மாட்டேன் 


11) என்னுடைய உண்மையான பக்தன் வீட்டில் அவனுக்கு எந்த குறைவும் இருக்காது.


Jai Sai Ram..................

Friday, February 25, 2011

கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது!

 r

சீமானுக்கு பிரபாகரன் அறிவுரை... கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது!

சென்னை: முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி போன்ற தலைவர்களை தாக்கிப் பேசி வருத்தம் கொள்ள வைக்காதே என்று எனக்கு அறிவுரை கூறினார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.

இதுகுறித்து, ஜூனியர் விகடன் புலனாய்வு இதழில் சீமான் எழுதியிருப்பதாவது:

"
கடந்த ஜூலை 10-ம் தேதி... மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேசிவிட்டு, வீட்டுக்கு வந்தேன். காவல்துறையில் இருக்கும் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு.

''அடிபட்ட மீனவர்களில் ஒருவராக நீங்கள் அலறியதுபோல் இருந்தது உங்கள் பேச்சு. அதேவேளை, அரசு வேறு விதமாக யோசிக்கிறது. உங்களின் பேச்சைவைத்து மீள முடியாத அளவுக்கு வலுவான வழக்காக இருக்கும். என்ன காரணத்தினாலோ, முதல்வர் உங்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். நீங்கள் அவரைப்பற்றி ஆவேசமாகப் பேசுவதை எல்லாம், அவர் கவனத்துக்குக் கொண்டுபோய் சேர்த்து இருக்கிறார்கள். முதல்வரின் கோபத்தைத் தணிக்கும் விதமாக வழக்குகளைப் போட வேண்டும் என்பதுதான் உளவுத்துறையின் உத்தேசம்!'' என்றார் அந்தக் காக்கி நண்பர்.

அவர் மட்டும் அல்ல... அரசியலில் இருப்பவர்கள் தொடங்கி என் அடிமட்ட அபிமானிகள் வரையிலான பலர் என் மீதான அக்கறையிலோ... இல்லை எச்சரிக்கும் தொனியிலோ... ''அவரைப்பற்றிப் பேசும்போது மட்டும் அதிகமாகத் தாக்காதீர்கள்...'' என்பார்கள்!

எனக்கு அறிவுரை வழங்கும் இந்த அன்பர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இவர்கள் சொல்லும் அறிவுரையை, அறவுரையாக ஏற்கெனவே எனக்கு இன்னொருவர் சொல்லி இருக்கிறார்.

முதல்வர் கலைஞரையோ, காங்கிரஸ் தலைவர் சோனியாவைப் பற்றியோ பேசும்போது சொல்ல வேண்டிய கருத்துகளை மட்டும் சொல்லுங்கள். ஆவேசமோ... ஆத்திரமோ... கொள்ளாதீர்கள். விமர்சனங்கள் வைக்காதீர்கள். அது சம்பந்தப்பட்டவர்களை மனரீதியாய் வருத்தம்கொள்ள வைத்துவிடும்!'' எனச் சொன்ன அந்த நபர் யார் தெரியுமா?

யாரை என் வாழ்வியல் வடிவமாக... யாரை என் நெஞ்சத்து நெருப்பாக... யாரை என் நாடித் துடிப்பின் நரம்பாக நினைக்கிறேனோ... அந்தத் தமிழ்த் தேசியத் தலைவன் பிரபாகரன் சொன்ன வார்த்தைகள் இவை!

ஈழ மண்ணில் கால்வைத்து, என் நெஞ்சத்து நாயகனை சந்தித்த திருநாளில், அவர் என் புத்திக்குள் ஏற்றிய போதனை இது. குருதியாறு ஓயாத - கொந்தளிப்பு அடங்காத அந்த மண்ணில், எதிரியையும் மதிக்கத்தக்க மாண்புகொண்டவனாக எம் தலைவன் இருந்தது, ஆத்திரத்தோடு அலையும் இந்த உலகத்தின் ஆச்சரியம்!

''பேச்சும் ஒரு ராணுவம்தான். எங்கள் துப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் தோட்டாக்களைவிட, உங்களின் வார்த்தைகள் வல்லமை வாய்ந்தவை. அதனால், தரம் தாழ்ந்த பேச்சு உங்களுக்குத் தேவை இல்லை. மூன்றாம்தர அரசியலில் நீங்களும் ஒரு ஆளாக உருவெடுத்துவிட வேண்டாம்!'' என என் தலைவன் தட்டிக்கொடுத்துச் சொன்ன வார்த்தைகளைத்தான் தடம் மாற்றும் மந்திரங்களாக ஏற்றுக்கொண்டு தமிழகத்துக்கு வந்தேன்.

ஈழத்தில் போர் தீவிரம் எடுத்து கொத்துக் கொத்தாக தமிழர்கள் செத்தழிந்த நேரம்... தமிழ்த் திரையுலகம் ஏற்பாடு செய்து இருந்த இராமேஸ்வரம் போராட்டத்தில் கலந்துகொண்டு ஈழ விவகாரத்தின் உண்மைகளை உரக்கச் சொன்னேன். அவை இறையாண்மை மீறலாகக் கையில் எடுக்கப்படும் என நான் எண்ணவில்லை.

ஆனால், ராமேஸ்வரம் போராட்டத்தை நேரலையில் பார்த்த தலைவர் பிரபாகரன், ''என்னைய தலைவன்னு சொல்லலைன்னா இப்போ என்ன? அந்த ரெண்டு பேருக்குமே என்னையப் பிடிக்காதே... இந்தளவுக்குப் பேசிய சீமானை வெளியே விட்டு வெச்சிருப்பாங்களா?'' எனச் சொன்னாராம். ராமேஸ்வரம் கூட்டம் முடிவதற்குள்ளேயே தலைவரின் கருத்தை என்னிடம் அலைபேசியில் சொன்னார் நடேசன் அண்ணா.

அடுத்த சில நாட்களிலேயே ராமேஸ்வரம் விவகாரத்தில் என் மீதும், அமீர் மீதும் வழக்குப் போடப்பட... "இதைத்தான் நான் அப்போதே சொன்னேன். ஆனாலும், பரவாயில்லை. அவனுக்கு யாரும் ஆறுதலோ தேறுதலோ சொல்ல வேண்டியதில்லை. என் தம்பி புலிபோல் சிறைமீண்டு வருவான்!'' எனச் சொல்லி இருக்கிறார் தலைவர்.

இங்கே பேசப்படும் வார்த்தைகளுக்கு என்ன விளைவு நடக்கும் என்பதை அங்கே இருந்தபடியே அனுமானித்த தலைவரின் முன்யோசனை இன்றைக்கும் என்னை சிலிர்க்க வைக்கிறது.

போர்க் களத்தில் இருந்தபடியே தமிழக அரசியல் கள நிலவரங்களை அறிந்த புலித் தளபதிகள் அடிக்கடி என்னைத் தொடர்புகொண்டு பேசுவார்கள். ''தலைவரை நினைத்து கவலைப்படாதே... எங்களின் துயரங்களை நினைத்து தமிழகத்தில் இருப்பவர்களை விமர்சிக்காதே... கவனம்... கவனம்...'' என ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அறிவுறுத்தும் அண்ணன் சூசை, கடைசிக் கட்ட போர் முனையில் இருந்தபடி என்னைத் தொடர்புகொண்ட கடைசிப் பேச்சு, நினைக்கும் போதெல்லாம் நெஞ்சைக் கிழிக்கக்கூடியது.

கடற்புலி சூசையின் கடைசி குரல்... 

ஈழத்தின் துயரமான திசை மாற்றம் என்னை எல்லா விதத்திலும் இயலாமைக்காரனாக மாற்றிப்போட்டு இருந்த நேரம்... சூசை அண்ணனிடம் இருந்து எனக்கு வந்த அழைப்பை தம்பி ஒருவன் எடுத்திருக்கிறான். ''சாவின் விளிம்பில் நிற்கிறோம்டா தம்பி... நான் பேசுவதைப் பதிவுசெய்து தம்பி சீமானிடம் கொடு. திரும்பிய பக்கம் எல்லாம் எங்கட சனங்கள் செத்துக் கிடக்குறாங்க. இதுவே என்னுடைய கடைசிப் பேச்சாக இருக்கலாம். எல்லோரும் தைரியமாக இருங்கள்...'' எனச் சொல்லி இருக்கிறார்.

அப்போது என் சார்பாக பேசிய தம்பி தாங்க முடியாமல் அழ, ''அழக் கூடாது. தைரியமா இருக்கணும். தமிழன் அழக் கூடாது. அழுதால் இனி என்னிடம் பேசாதே...'' எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அந்தப் பேச்சின் பதிவை இப்போது கேட்டாலும், அவர்களின் நெஞ்சுறுதியும் நிலைகுலையாத் தைரியமும் கண் முன்னே வந்துவிட்டுப் போகின்றன.

சூசை அண்ணனின் சொல்படி யாரையும் விமர்சித்துப் பேச எனக்கும் விருப்பம் இல்லைதான். ஆனால், இந்த அன்னை மண்ணில் நடக்கும் அக்கிரமங்களையும் கேலிக்கூத்துகளையும் பார்த்தால்... கிறுக்குப் பிடித்தே செத்துவிடுவேன் போல் இருக்கிறது.

தம்பிகளே! ராஜபக்சேவின் போர்க் குற்றத்தை விசாரிக்கக் கோரி உலக நாடுகளே ஒருசேரக் குரல் கொடுக்கையில், சொந்த இனத்துக்காக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றக்கூட நம் முதல்வருக்கு தெம்பில்லாமல் போய்விட்டதா?

சுட்டு விளையாட ஈழ உயிர்கள் இல்லாது போனதால், மீனவர்களை விரட்டும் சிங்கள கடற்படையைக் கண்டிக்க இந்த வக்கற்ற மண்ணில் யாருக்குமே வாய் இல்லையா?

ஈழப் போர் துயரமான முடிவாக அமைந்த வேளையிலும், தொப்புள் கொடி உறவாகத் துடிக்க வேண்டிய தமிழகத் தலைவர், 'சகோதர யுத்தம்... சகோதர யுத்தம்� என்றே திரும்பத் திரும்பச் சொல்லி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாரே... இந்தக் குரூரத்தை எப்படி ஐயா பொறுப்பது?

பிரபாகரன் நிகழ்த்தியது சகோதர யுத்தம் என்றால், தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது என்ன சகோதர முத்தமா? இதைக் கேட்டால், உங்களுக்குப் பொத்துக்கொண்டு வருகிறதா கோபம்?

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்...

அவர் வீட்டில் சோதனை... இவர் வீட்டில் விசாரணை... எனத் தமிழகமே அல்லோலகல்லோலப்பட்டுக் கிடக்கையில், தமிழக டி.ஜி.பி. மூலமாக அதிமுக்கிய அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிடவைத்து இருக்கிறீர்கள். பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரைக் கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டு இருப்பதாகச் சொல்லி, இழவு வீட்டிலும் இடி பாய்ச்சி இருக்கிறீர்களே... உங்களின் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நிஜமாகவே புலிகளால் உங்களுக்கு ஆபத்து இருக்கிறதா?

பிச்சைக்காரர்கள் இல்லை... பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை... இச்சைக் கேடுகள் இல்லை... இரவானால் பயம் இல்லை... என உங்களாலோ, உலக மகா தலைவர்களாலோ நடத்திக் காட்ட முடியாத நாட்டின் தலைவனாக இருந்த எங்கள் பிரபாகரன்... உங்களைக் கொல்ல ஆள் அனுப்பி இருக்கிறாரா?

கோழைகளை புலிகள் கொல்வதில்லை!

என்ன பின்னணி..? காலம் காலமாக உங்களின் தந்திர - எந்திர விளையாட்டை சகித்துவரும் எங்களை மேற்கொண்டும் நீங்கள் குழப்ப வேண்டாம் மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு நாதியற்று அலையும் புலிப் படையின் மீது பழி போட்டு, உங்களின் பழி பாவங்களைப் பதுக்கப் பார்க்கிறீர்களே... 'புலிகளால் ஆபத்து! என மத்திய உளவுத் துறை அபாயம் பாடியதாகச் சொல்லி ப.சிதம்பரம் வீட்டுக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறீர்கள்... பிரதமரின் விழாவுக்குப் பெருவாரியான கண்காணிப்புகளை மேற்கொள்ளச் சொல்லி இருக்கிறீர்கள்... தமிழகத்தில் புலிகளின் நடமாட்டம் இருக்கிறதா எனத் தீவிரமாக தேடச்சொல்லி இருக்கிறீர்கள்.

நாடாளும் தலைவர்களே... உங்களின் பதற்றத்தைத் தணிக்க... படபடப்பை அடக்க... பாதுகாப்பை உறுதி செய்ய... ஒரே ஒரு விஷயம் சொல்லவா... 'கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது!'

-இவ்வாறு சீமான் எழுதியுள்ளார்.

Monday, February 21, 2011

மாவீரன் அலெக்சாண்டரின்....


மாவீரன் அலெக்சாண்டரின் இறுதி நிமிடங்களும், கடைசி 


உலகத்தையே ஜெயிக்க வேண்டும் என்று கிளம்பியவன் ... மாவீரன் அலெக்சாண்டர்.
கிரேக்க தத்துவ மேதை அரிஸ்டாட்டில் அவனுக்கு குருவாக இருந்தார்.. தான் கலந்து கொண்ட எந்த போரிலும் தோல்வியே அடையாத வீரன்.

உலகையே தான் காலடியில் கிடத்திய மாவீரனின் இறுதி கட்டத்தில் ,  அவனது கடைசி சில விருப்பங்கள் என்ன என்பதை சமீபத்தில் ஒரு கட்டுரையில் படிக்க நேர்ந்ததை , உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நமது வாழ்வில் ஒவ்வொருவருக்கும் தேவையான பாடங்கள் அவை. 
=====================

பல போர்க்களங்களில் ஈடுபட்டு , உடல் தளர்ந்து  விரக்தியில் சொந்த நாடு திரும்பிக் கொண்டு இருந்தான். மரணப் படுக்கை. இனி உயிர் பிழைக்க முடியாது என்று தெரிந்து விட்டது. சுற்றிலும் அவனது படைத் தளபதிகள் , வைத்தியர்கள்.. சோகத்தில் அவன் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
சாகும் முன் தன் தாயின் முகத்தை  கடைசியாக ஒரே ஒரு தடவை பார்க்க ஆசைப்பட்டான்.. அது நிராசை என்று அவனுக்கும் தெரிந்து இருந்தது. 
தனது உயிரின் எஞ்சி இருந்த கடைசி சக்தியை திரட்டி பேச ஆரம்பித்தான்....


  
அருகில் இருந்த முக்கிய தளபதியைப் பார்த்து, " நண்பா!  எனக்கு மூன்று கடைசி ஆசைகள்.. நிறைவேற்றித் தருவாயா?"
" சொல்லுங்கள், சக்கரவர்த்தி". 
" முதலாவதாக , நான் இறந்த பிறகு, என் சவப் பெட்டியை , எனக்கு மருத்துவம் பார்த்த வைத்தியர்கள் மட்டுமே தூக்கி செல்ல வேண்டும்... .. 
 இரண்டாவதாக  என்னுடைய சவ ஊர்வலம் செல்லும் போது , நான் இதுவரை வெற்றி கண்டபோது , கவர்ந்த தங்க , வைர நகைகளை வழி தோறும்  சுடுகாடு வரையிலும் , தரையில் கீழே போட்டுக்கொண்டே செல்ல வேண்டும்


மூன்றாவதாக , சவப் பெட்டிக்கு வெளியே  என் கைகள் இரண்டும் தெரியும் படி,   என்னை மண்ணில்  புதையுங்கள்".. 


அங்கு இருந்த அனைவரும் கண்டிப்பாக நிறை வேற்றுவோம் என்று ஒரே குரலில் உறுதி கூறினார்கள்... அனைவருக்கும் ஆனால் அதற்கான காரணம் மட்டும் புரியவில்லை..

அருகில் இருந்த பிரதான தளபதி  அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் , " மா மன்னா ! என் இப்படி கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? " என்று கேட்டான். 

வெளிறிப் போன முகத்துடன் , வறண்டு போன நாவைத் தடவியபடியே  அந்த மாவீரன் பேசினான்." ஒன்னும் இல்லை, நண்பா, எனக்கு வாழ்க்கை இப்போ தான் கத்துக் கொடுத்த பாடங்கள் அவை. நாளைக்கு உலகத்திலே உள்ளவங்களுக்கு ஒரு பாடமா இருக்கும்."

மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குது.. உடம்பு புரட்டி போடுது.. எல்லார் கண்ணிலும் கண்ணீர்.

" என்கிட்டே உலகத்திலேயே  தலை சிறந்த மருத்துவர்கள் இருக்கிறாங்க.. ஆனா, பாரு , போகப் போற உயிரை , யாரும் தடுக்க  முடியலை. நான் எவ்வளவோ சம்பாதிச்சேன். கொள்ளை அடிச்சேன்., ஆனா மண்ணில் புதைக்கிறப்போ , அதிலே இருந்து ஒரு துளி கூட நம்ம கூட வரப் போறது இல்லே.எல்லாம் மண்ணிலே தான்...  நான் எவ்வளவோ பேராசையில் இருந்தேன்.. என்ன வேணுமோ அனுபவிச்சேன். எல்லா செல்வங்களும் இருந்தது... கடைசிலே, நான் எதையும் கையிலே கொண்டு போகலை.. என் கையை பார்த்துக்கோ..வெறும் கையோட வந்தேன், வெறும் கையோட தான் போறேன். "

இதிலே இருந்து நமக்கு என்ன தெரியுது ?:

" உன் கிட்ட என்னதான் வசதி இருந்தாலும், சக்தி இருந்தாலும், மருத்துவம் பார்க்கிற வசதி இருந்தாலும் , விதினு ஒன்னு வந்தா யாரும் ஒன்னும் பண்ண முடியாது.... உடம்பை ஒழுங்கா பார்த்துக்கிறவங்களுக்கே இந்த கதி... நம்ம உடம்பைக் கூட பார்த்துக்காம , சொத்து , சுகம் னு தேடி , எதைக் கொண்டு போகப்போறோம்  ..? நம்மள்ள எத்தனை பேரு, நமக்காக , நம்ம குடும்பத்துக்காக நேரத்தை செலவழிக்கிறோம்..?
செய்யிற வேலை இல்லை சொந்த பிசினெஸ் , இதையே காரணம் காட்டி , அதுக்குள்ளேயே மூழ்கி, என்ன பண்றோம் னே தெரியாம, திடீர்னு வயசு ஆகி... மேலே போகப்போறோம்..  நாம கடைசிலே கொண்டு போகப்போறதும் ஒன்னும் இல்லே.. இருக்கிறவரைக்கும் , நாமும் நம்ம குடும்பமும் சந்தோசமா இருப்போம்.. நமக்கு மிஞ்சியதை , முடியாதவங்களுக்கு , நம்மாலே முடிஞ்சவரை உதவி செய்வோம்...
வாழ்க்கையிலே இருந்து நாம என்ன கத்துக்கிறோம் னு புரிஞ்சு , நல்ல விதமா வாழ்க்கையை மாத்துவோம்..
சம்பாதிக்கிறதுலே ஒரு பகுதியை, முடியாத ஏழைகளுக்கு , முதியவர்களுக்கு கொடுத்து உதவுங்க.. உங்களை பெத்தவங்களை நேசியுங்க... அவங்க மனசு வாழ்த்த , வாழ்த்த , உங்களுக்கு நல்ல வாழ்வு நிச்சயம் கிடைக்கும்.

பெத்த புள்ளைங்க உயிரோட இருக்கிறப்போ, அனாதையா  முதியோர் இல்லத்துலே சேர்க்கிற கொடுமை இனிமேலாவது ஒழியட்டும்... 

முடிஞ்சவரை , ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், உங்க உடல் நலத்துக்காக செலவழியுங்க.. அது உடற் பயிற்சியாக இருக்கலாம். இல்லை "வாக்கிங்", "ரன்னிங்",  "யோகா" வா இருக்கலாம்..நம்மளை நாமே தான் பார்த்துக்கணும்.. உங்க குழந்தைகளுக்கும் கத்துக் குடுங்க.. ஒரு தலைமுறைக்கே வழி காட்டியா இருக்கும்..!!!

வாழ்க மானுடம்! வாழ்க மனித நேயம்..!


Read more: http://www.livingextra.com/2011/02/blog-post_16.html#ixzz1Eb2cm76X

Monday, February 7, 2011

ஆறு மனமே ஆறு

ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு 
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு (ஆறு)

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் 
உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் 
துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி !

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் - 
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும் - 
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும் (ஆறு)

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் 
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை 
உயரும்போது பணிவு கொண்டால் 
உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை எனப்து அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த 
நான்கு கட்டளை அறிந்த மனதில் 
எல்லா நன்மையும் உண்டாகும் (ஆறு)

ஆசை,கோபம்,களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம் 
அன்பு,நன்றி,கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம் - இதில் 
மிருகம் என்பது கள்ள மனம் - உயர்
தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது 
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் (ஆறு)